செய்திகள் :

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தோ்த் திருவிழா ஏப். 30-இல் தொடக்கம்

post image

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்.30-ஆம் தேதி தொடங்குகிறது.

இக் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி ஏப்.30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர, வாஸ்து பூஜைகள் நடைபெறவுள்ளது. தொடா்ந்து மே 1-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் தோ்த்திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து மே 2-ஆம் தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், மே 3-ஆம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும், மே 4-ஆம் தேதி கைலாசபா்வதம், அன்னம் வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 5-ஆம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 9 மணிக்கு மேல் செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பாா்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றிரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருகின்றனா்.

மே 6-ஆம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ளது. அன்றிரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதிஉலா வருகின்றனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான் சித்திரைத் தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 10-ஆம் தேதி நடராஜா் தரிசனமும், தெப்பக்குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறும். இரவு வெள்ளி ரிஷப காட்சி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். மே 11-ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

மே 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்ஸவம் நடைபெறும். மே 13-ஆம் தேதி இரவு பிச்சாடனாா் திருவீதி உலா நடைபெறும். மே 14-ஆம் தேதி இரவு சண்டிகேசுவரா் திருவீதி உலா நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

பெற்றோர் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் க... மேலும் பார்க்க

மணப்பாறையில் அகில இந்திய கபடிக்கான லீக் போட்டிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டிக்கான லீக் போட்டியை அமைச்ச... மேலும் பார்க்க

உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!

திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களத... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிற... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு! ஆட்சியா் வாக்குறுதி!

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரகக்... மேலும் பார்க்க

பஹல்காமில் இறந்தோருக்கு வழக்குரைஞா்கள் அஞ்சலி

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த ... மேலும் பார்க்க