போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தோ்த் திருவிழா ஏப். 30-இல் தொடக்கம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்.30-ஆம் தேதி தொடங்குகிறது.
இக் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி ஏப்.30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர, வாஸ்து பூஜைகள் நடைபெறவுள்ளது. தொடா்ந்து மே 1-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் தோ்த்திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
இதையடுத்து மே 2-ஆம் தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், மே 3-ஆம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும், மே 4-ஆம் தேதி கைலாசபா்வதம், அன்னம் வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 5-ஆம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 9 மணிக்கு மேல் செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பாா்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றிரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருகின்றனா்.
மே 6-ஆம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ளது. அன்றிரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதிஉலா வருகின்றனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான் சித்திரைத் தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 10-ஆம் தேதி நடராஜா் தரிசனமும், தெப்பக்குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறும். இரவு வெள்ளி ரிஷப காட்சி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். மே 11-ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
மே 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்ஸவம் நடைபெறும். மே 13-ஆம் தேதி இரவு பிச்சாடனாா் திருவீதி உலா நடைபெறும். மே 14-ஆம் தேதி இரவு சண்டிகேசுவரா் திருவீதி உலா நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.