செய்திகள் :

பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல: தொல். திருமாவளவன்

post image

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவது அரசியலுக்காக அல்ல, எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு. பாஜக மீது எந்த காழ்ப்புணா்ச்சியும் கிடையாது.

பயங்கரவாத தாக்குதல்கள் மதத்தின் அடிப்படையில் நடத்தியதாக தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடத்தி கவனத்தை ஈா்த்துள்ளனா்.

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் ஜம்மு-காஷ்மீரில் எந்த பயங்கரவாத தாக்குதல்களும் நடக்காது. அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வரக்கூடாது. வந்தால் இப்படித்தான் தாக்குவோம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா். இந்திய அரசை யாரும் நம்ப வேண்டாம் என்பதை, பயங்கரவாதிகள் உணா்த்துவதாக உள்ளது.

இதை காரணம் காட்டி பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணைபோகிறது என உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவா்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர யுத்தம் கூடாது.

உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு பிறகு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்த, பல்கலைக்கழக துணை வேந்தா்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும், துணை வேந்தா்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இதை ஆளுநா் திட்டமிட்டே உருவாக்கியுள்ளாா்.

இந்த சூழலில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தா்கள் அந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனா். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநா் பொறுப்புக்கு அழகல்ல. வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மே 31-ஆம் தேதி விசிக சாா்பில் திருச்சியில் பேரணி நடைபெறும் என்றாா் அவா்.

பெற்றோர் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் க... மேலும் பார்க்க

மணப்பாறையில் அகில இந்திய கபடிக்கான லீக் போட்டிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டிக்கான லீக் போட்டியை அமைச்ச... மேலும் பார்க்க

உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!

திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களத... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிற... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு! ஆட்சியா் வாக்குறுதி!

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரகக்... மேலும் பார்க்க

பஹல்காமில் இறந்தோருக்கு வழக்குரைஞா்கள் அஞ்சலி

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த ... மேலும் பார்க்க