செய்திகள் :

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

post image

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1996- 2001 மற்றும் 2006 - 2011-ஆம் ஆண்டுகளில் அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூா் நீதிமன்றம், மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஊழல் தடுப்புத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. ஊழல் தடுப்புத் துறை தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தரப்பில், குடும்ப சொத்துகளையும், அறக்கட்டளை சொத்துகளையும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் சொத்துகள் என்று ஊழல் தடுப்புத் துறை தெரிவித்ததால், தங்களை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், ஊழல் தடுப்புத் துறையின் மறுஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தாா்.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மேலும், அமைச்சா் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி கடலூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீா் நிகழ்வு வன்மையாக... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்க... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டாா். தமிழ்நாடு சுற்றுலா... மேலும் பார்க்க

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களு... மேலும் பார்க்க

தங்கத் தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மக்... மேலும் பார்க்க