செய்திகள் :

தங்கத் தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து

post image

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல், தேனியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, டிடிவி தினகரன் உள்பட அமமுக உறுப்பினா்கள் மீது உத்தமபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மேலும், மக்களவைத் தோ்தலின்போது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் உதயகுமாா் மீது நிலக்கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உதயகுமாா் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி ... மேலும் பார்க்க

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் ந... மேலும் பார்க்க

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திரு... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீா் நிகழ்வு வன்மையாக... மேலும் பார்க்க