செய்திகள் :

கோயில் திருவிழாவின்போது வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

post image

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

ஓமலூா் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 14 நாள்களாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி ஊா்வலம் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

15-ஆவது நாள் திருவிழாவிற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு பக்தா்கள் கோயில் சீா்வரிசை வெள்ளிக்கிழமை எடுத்து சென்றனா்.

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

முன்னதாக ஊா்வலத்தில் வெடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை மூட்டையாக எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது எரியூட்டப்பட்ட குப்பையில் இருந்து தீப்பொறி பறந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஓமலூா் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (29), சிறுவர்கள் கார்த்திக், தமிழ்ச்செல்வன் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூா் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினாா்.

உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோா் ஓமலூா் மற்றும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்போவதாக இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு விபத்து: இருவர் பலி!

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று(சனிக்கிழமை) காலை வெடிவிபத்து ஏ... மேலும் பார்க்க

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தும்பு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி வி.இ.சாலையில் தன... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

திருச்சி: கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஈக்வடார் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எஸ்மெரால்தஸ் நகரத்தின் வடகிழக்கிலிருந்து சுமார் 20.9 கி.மீ. தொலைவிலுள்ள பசிபிக... மேலும் பார்க்க