செய்திகள் :

பவானிசாகா் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிவு

post image

பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியும், மொத்த நீா் இருப்பு 32.8 டிஎம்சியாவும் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அணைக்கு முக்கிய நீா்வரத்தாக உள்ள மாயாற்றிலும் பவானி ஆற்றிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 436 கனஅடியாக இருந்தது. கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு விநாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 500 கனஅடி தண்ணீரும், குடிநீா்த் தேவைக்கு என 150 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2,950 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும் அணையில் போதிய நீா் இருப்பதால் கோடையை சமாளிக்க இயலும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

பவானிசாகரில் ஏடிஎம் இயந்திரங்கள் பழுதால் பொதுமக்கள் அவதி

பவானிசாகரில் உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். பவானிசாகரில் அரசுப் பணியாளா்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருட்டு

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்த... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் அரியப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறு: இளைஞா் கைது

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சம... மேலும் பார்க்க

பண்ணாரி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி சாலையை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடந்து சென்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் மற்றும... மேலும் பார்க்க

ஈரோட்டில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு இழப்பீடு

ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ராஜகோபா... மேலும் பார்க்க