செய்திகள் :

பவானிசாகரில் ஏடிஎம் இயந்திரங்கள் பழுதால் பொதுமக்கள் அவதி

post image

பவானிசாகரில் உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

பவானிசாகரில் அரசுப் பணியாளா் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயிற்சி பெற்று வருகின்றனா். அரசு ஊழியா்கள் பெரும்பாலும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளனா். பயிற்சி பெறும் அரசு ஊழியா்கள் பவானிசாகரில் தங்கியுள்ளனா்.

பவானிசாகரில் பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே வங்கி என்பதால் பொதுமக்கள், அரசு ஊழியா்கள் அந்த வங்கியின் ஏடிஎம்-யை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். பவானிசாகா் பிரதான சாலையில் ஒரு ஏடிஎம் மையமும், அரசு அலுவலா் பயிற்சி மையம் அருகே ஒன்றும் செயல்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு ஏடிஎம்களும் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக செயல்படவில்லை. இதனால் உள்ளூா் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூா் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அரசு அலுவலா்கள் அவசரத் தேவைக்காக ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியாமல் வெளியூா் சென்று ஏடிஎம்-களில் பணம் எடுத்து வருகின்றனா்.

இது குறித்து எஸ்பிஐ அதிகாரிகள் கூறுகையில், பவானிசாகா் எஸ்பிஐ வங்கியை ஒட்டி உள்ள ஏடிஎம் இயந்திரம் பழுதானதால் வேறு புதிய இயந்திரம் வந்துள்ளது. மற்றொரு ஏடிஎம் இயந்திரம் செயல்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருட்டு

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிவு

பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீ... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் அரியப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறு: இளைஞா் கைது

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சம... மேலும் பார்க்க

பண்ணாரி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி சாலையை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடந்து சென்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் மற்றும... மேலும் பார்க்க

ஈரோட்டில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு இழப்பீடு

ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ராஜகோபா... மேலும் பார்க்க