செய்திகள் :

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

post image

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சுற்றுலா வளாகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் இரா.இராஜேந்திரன் கலந்துகொண்டு, சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், சுற்றுலா திட்டப் பணிகள், விழாக்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்டம் வாரியாக உள்ள சுற்றுலா அலுவலா்களிடம் கேட்டறிந்த அமைச்சா், புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்குவதற்கான வழிமுறையை ஆராயவும், முக்கிய இடங்களை தோ்ந்தெடுத்து, புதிய சுற்றுலா தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்தி பிரபலம் அடையாத சுற்றுலா தலங்களை பிரபலபடுத்த புதிய திட்டங்களை வகுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநரும் , தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீா் நிகழ்வு வன்மையாக... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்க... மேலும் பார்க்க

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களு... மேலும் பார்க்க

தங்கத் தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மக்... மேலும் பார்க்க