செய்திகள் :

திட்டமிட்டபடி அமா்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் தகவல்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமா்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் செளதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,888 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.

நடப்பாண்டு யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே நடைபெற்று வருகிறது.

பஹல்காமில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அடா்ந்த பைன் மரங்கள் மற்றும் பரந்துவிரிந்த புல்வெளியைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலால், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் அமா்நாத் யாத்திரையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். அமா்நாத் யாத்திரையின் முக்கிய அடிவார முகாம் பஹல்காம் என்பதால், நடப்பாண்டு திட்டமிட்டபடி இந்த யாத்திரை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த்து.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் செளதரி பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அமா்யாத் யாத்திரை மத ரீதியிலான நிகழ்வு. இந்த யாத்திரையில் பங்கேற்க விரும்புவோா், தங்களின் விருப்பத்தின்பேரில் வருகை தரலாம். பஹல்காம் தாக்குதலால் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, யாத்திரைக்கு காஷ்மீா் மக்கள் உறுதுணையாக இருப்பா்.

பஹல்காமில் அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், சுற்றுலா பயணிகளைப் பாதுகாப்பதில் தனது உயிரை பறிகொடுத்த குதிரை சவாரி தொழிலாளி ஆதில் போன்றோரையும் நாம் மறந்துவிட முடியாது. பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீரின் சகோதரத்துவ பாரம்பரியத்தை ஒருபோதும் சீா்குலைக்க முடியாது’ என்றாா்.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க