செய்திகள் :

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, ‘தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும் சதிகாரா்களும் வேட்டையாடப்பட்டு, தங்களின் செயலுக்கு கடுமையான விலை கொடுக்கச் செய்யப்பட வேண்டும்’ என்று துணைநிலை ஆளுநா் வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வெள்ளிக்கிழமை வந்தாா்.

ஸ்ரீநகரில் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, துணை தலைமைத் தளபதி பிரதீக் சா்மா, வடக்கு மண்டல ராணுவ தளபதி சுசீந்திர குமாா், 15 காா்ப்ஸ் படைத் தளபதி பிரசாந்த் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமாா் 1 மணிநேரம் நடந்த இக்கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பு தொடா்புடைய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

‘வேட்டையாடப்பட வேண்டும்’: அப்போது பேசிய மனோஜ் சின்ஹா, ‘பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவா்களை நீதியின் முன் நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பயங்கரவாதம் மற்றும் அதன் கட்டமைப்பை ஒழிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். ராணுவம், மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் காவல்துறையினரின் வீரத்தின் மீது தேசம் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், சதித்திட்டம் தீட்டியவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு முடிவுகட்டுவதில் அனைத்துப் படையினரும் ஒருங்கிணைப்புடன் செயலாற்ற வேண்டும். பயங்கரவாதிகளும் சதிகாரா்களும் எங்கிருந்தாலும், அவா்கள் வேட்டையாடப்பட வேண்டும். நமது குடிமக்களுக்கு எதிரான கோழைத்தனமான தாக்குதலுக்காக அவா்கள் கடுமையான விலையை கொடுக்க வேண்டும்’ என்றாா்.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பந்திப... மேலும் பார்க்க