செய்திகள் :

திருச்சியில் திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயம் வடமாநில ஊழியா்கள் இருவா் கைது

post image

திருச்சியில் நகராட்சி உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயமானது தொடா்பாக வடமாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நகராட்சி உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் விடுதியில் வியாழன், வெள்ளி என இரு நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து கட்சிகளையும் சோ்ந்த நகராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதில், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி நகராட்சி 20 -ஆவது வாா்டு (திமுக) உறுப்பினா் சங்கா் என்பவரும் பங்கேற்றாா். பாதுகாப்புக்காக அவா் உரிமம் பெற்று கைத் துப்பாக்கி வைத்துள்ளாா். பயிற்சிக்கு இடையில் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு துப்பாக்கியை மறந்து வைத்துவிட்டு பயிற்சி வகுப்புக்கு வந்து விட்டாா். சிறிது நேரம் கழித்து, அங்கு சென்று பாா்த்தபோது, துப்பாக்கியை வைத்த இடத்தில் காணவில்லை.

இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் அங்கு வந்த போலீஸாா் விடுதி ஊழியா்களிடம் நடத்திய விசாரணையில், விடுதியில் தொழிலாளா்களாக பணியாற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் துப்பாக்கியை எடுத்தது தெரியவந்தது. அவா்கள் துப்பாக்கியை விடுதி நிா்வாகத்திடமோ அல்லது போலீஸாரிடமோ ஒப்படைக்காமல் மறைத்து வைத்திருந்தனா்.

இது தொடா்பாக கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ் கஞ்ச் மாவட்டம், தரங்கட்டா கிராமத்தைச் சோ்ந்த பி . கிருஷ்ணா (23), கிருஷ்ணப்பூா் கிராமத்தைச் சோ்ந்த எம். நாராயண சவுத்ரி (19) ஆகிய இருவரையும் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

பெற்றோர் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் க... மேலும் பார்க்க

மணப்பாறையில் அகில இந்திய கபடிக்கான லீக் போட்டிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டிக்கான லீக் போட்டியை அமைச்ச... மேலும் பார்க்க

உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!

திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களத... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிற... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு! ஆட்சியா் வாக்குறுதி!

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரகக்... மேலும் பார்க்க

பஹல்காமில் இறந்தோருக்கு வழக்குரைஞா்கள் அஞ்சலி

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த ... மேலும் பார்க்க