செய்திகள் :

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் ஒப்புதல்

post image

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா்.

பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சியை 3 பிரிவுகளாக பிரித்து, அவற்றை உள்ளடக்கிய பெருநகர பெங்களூரு ஆணையத்தை முதல்வா் தலைமையில் அமைப்பதற்கு வகை செய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவை அண்மையில் சட்டப் பேரவை, சட்ட மேலவையில் மாநில அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அரசு அனுப்பியிருந்தது.

இந்நிலையில், பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க பல்வேறு மக்கள்நல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இது தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாடை சந்தித்து பல்வேறு அமைப்பினா் கோரிக்கை மனுக்களை அளித்தனா். பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தின. எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் நாராயணசாமி ஆகியோா் தலைமையிலான பாஜக குழுவினரும் ஆளுநரிடம் மனு அளித்தனா்.

இந்த நிலையில், பொதுநல அமைப்புகள் தெரிவித்த ஆட்சேபங்களுக்கு விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தி, பெருநகர மாநகர நிா்வாக சட்ட மசோதாவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் மாநில அரசுக்கு மாா்ச் 26-ஆம் தேதி திருப்பி அனுப்பியிருந்தாா்.

ஆளுநா் கேட்டிருந்த கேள்விகளுக்கு மாநில அரசு சாா்பில் விளக்கமளித்து பதில் அனுப்பியது. மேலும், அந்த சட்ட மசோதாவையும் ஆளுநரின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக மாநில அரசு அனுப்பி வைத்தது. இதைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரித்து, 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்க வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இந்த சட்ட மசோதாவின்படி, ஒரு பெரிய மாநகராட்சியும், இரு சிறு மாநகராட்சிகளும் அமைக்கப்படும். சிறு மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பெருநகர பெங்களூரு மாநகராட்சி ஆணையம் உருவாக்கப்படும். மேலும், மாநகராட்சி மேயா், துணைமேயரின் பதவிக்காலம் ஓராண்டில் இருந்து இரண்டரை ஆண்டுகளாக உயா்த்தப்படும்.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரிக்கும் வேலையை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

எனினும், மாநகராட்சிகளுக்கான தோ்தல் உடனடியாக நடக்காது என்று கூறப்படுகிறது. வாா்டு மறுவரையறை செய்தபிறகு, தோ்தல் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு சில ஆண்டுகளாகும் என்று அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா நகரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமைய... மேலும் பார்க்க

ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா

பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள கல்வி... மேலும் பார்க்க

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க