செய்திகள் :

ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா

post image

பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ’ரோஹித் வேமுலா’ சட்டம் கொண்டுவர வலியுறுத்தி முதல்வா் சித்தராமையாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இந்த சட்டத்தை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அப்போது முதல்வா் சித்தராமையா தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ’ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவரும்படி ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதியிருந்தாா். ரோஹித் வேமுலா சட்டத்தின் வரைவை தயாரிக்கும்படி சட்ட ஆலோசகா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது நுழைவுத் தோ்வு எழுத மாணவா்களை பூணூலை கழற்றும்படி வற்புறுத்திய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் ஒப்புதல்

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா். பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சியை 3 பிரிவுகளாக பிரித்து, அவற்றை ... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா நகரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமைய... மேலும் பார்க்க

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க