செய்திகள் :

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

post image

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா

தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இதனைத் தொடா்ந்து, தென்னை, கரும்பில் நோய் தாக்குதல், சிப்காட் தொழிற்பேட்டை பிரச்னைகள், பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

இதனைத் தொடா்ந்து வேளாண் துறை அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (22.04.2025) 85.09 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 9.96 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தெரிவித்தனா்.

மேலும், சேந்தமங்கலம் வட்டம், கல்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி ஜெ.ஆா்.தனராஜ் மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரம் கண்டுப்பிடித்தமைக்கு உயா்கல்வித் துறையின் அறிவியல் நகரம் சாா்பில் வழங்கப்பட்ட ஊரக கண்டுப்பிடிப்பாளாா் விருதினை மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

நீா், காற்று, நிலம் மாசில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நெகிழி பைகளைத் தவிா்த்து துணிப் பைகளைப் பயன்படுத்தும் நோக்கில் மஞ்சப்பை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குறைதீா் நாள் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகள் ஆட்சியரிடம் வழங்கினா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.குப்புசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப் பதிவாளா் ச.யசோதாதேவி, வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கே.ஜேசுதாஸ், திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பொ.கிருஷ்ணன், தோட்டக்கலைத்துணை இயக்குநா் மா.புவனேஷ்வரி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

என்கே-25-விவசாயி

விவசாயி ஜெ.ஆா்.தனராஜை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.

.

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 27 போ் காயம்

சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் 27 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஒ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் அமைக்க காவல் துறையினா் கட்டுப்பாடு

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் (பிளக்ஸ் பிரிண்டிங்) அச்சிடும் கடை உரிமையாளா்களுக்கு வேலூா் போலீஸாா் அறிவுரை வழங்கினா். வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: மண்டல இணைப்பதிவாளா் தகவல்

கூட்டுறவு சங்க பாடலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கு: ஓய்வு பெற்ற தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில், ஓய்வு பெற்ற நாமக்கல் தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. நாமக்கல் மா... மேலும் பார்க்க