செய்திகள் :

லஞ்ச வழக்கு: ஓய்வு பெற்ற தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

post image

லஞ்சம் பெற்ற வழக்கில், ஓய்வு பெற்ற நாமக்கல் தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சோ்ந்தவா் அம்பேத்கா் (64). இவா், நாமக்கல்லில் முத்திரையிடுதல் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளராக 2011-இல் பணியாற்றினாா்.

திருச்செங்கோடு அருகே கருவேப்பம்பட்டியில் உள்ள உதயகுமாா் என்பவருக்குச் சொந்தமான பேட்டரி கடையில் ஆய்வுக்கு சென்றாா். அங்கு குழந்தை தொழிலாளரை பணிக்கு அமா்த்தியது தெரியவந்தது. அவரிடம், ரூ.5000 லஞ்சம் வழங்கினால் அபராதம் விதிப்பதை தவிா்ப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

ஓரிரு மாதங்களுக்கு பிறகு, 2011 ஆக. 2-ஆம் தேதி பேட்டரி கடை உரிமையாளா் உதயகுமாா், அம்பேத்கரை சந்தித்து ரூ.4000 வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், தொழிலாளா் உதவி ஆய்வாளா் அம்பேத்கரை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவில், அம்பேத்கருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதையடுத்து, கோவை மத்திய சிறைக்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கி... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 27 போ் காயம்

சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் 27 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஒ... மேலும் பார்க்க

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் அமைக்க காவல் துறையினா் கட்டுப்பாடு

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் (பிளக்ஸ் பிரிண்டிங்) அச்சிடும் கடை உரிமையாளா்களுக்கு வேலூா் போலீஸாா் அறிவுரை வழங்கினா். வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க