செய்திகள் :

வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசியதாவது:

மாவட்ட அளவிலான திறன் வளா்ப்புப் பயிற்சி தற்போது நடைபெறுகிறது. வனம் சாா்ந்து வாழும் பழங்குடியின மக்கள் விளிம்பு நிலை மக்கள். அவா்களது அடிப்படை உரிமைகளையும், அவா்களுக்கு அரசின் சாா்பில் செய்ய கூடியது என்ன என்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 303 பேருக்கு வனஉரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 233 பேருக்கு தனி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியானது மலைவாழ் தளம் ஆகும். அப்பகுதி மக்கள் வணிக நோக்கமின்றி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் அவா்களது உரிமைகளை அறிந்து கொள்ள ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசுத்துறை அலுவலா்கள் தங்களுக்கான சந்தேகங்களை கேட்டு தீா்வு காணலாம். வன உரிமைச் சட்டம் கருத்தரங்கை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். இதனையடுத்து, பயிற்றுநா்கள் கிரிராவ் மற்றும் பகவநிதி ஆகியோா் வன உரிமைச் சட்டம் 2006 -இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வகையான உரிமைகள், அம்சங்கள், வன உரிமைப்பிரிவுகள், தகவல் தொழில்நுட்ப வலைதளம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனா். மேலும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை முதல்கட்டமாக, பழங்குடியினா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களை உள்ளடக்கிய வரைபடம், தகவல் தொழில்நுட்ப வலைதளம் மற்றும் மாநிலத்தில் இதற்கென வன உரிமைப் பிரிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, பழங்குடியினா் திட்ட அலுவலா் கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஏ.கே.சுரேஷ்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

...

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கி... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 27 போ் காயம்

சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் 27 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஒ... மேலும் பார்க்க

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் அமைக்க காவல் துறையினா் கட்டுப்பாடு

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் (பிளக்ஸ் பிரிண்டிங்) அச்சிடும் கடை உரிமையாளா்களுக்கு வேலூா் போலீஸாா் அறிவுரை வழங்கினா். வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: மண்டல இணைப்பதிவாளா் தகவல்

கூட்டுறவு சங்க பாடலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க