கூட்டுறவு பாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: மண்டல இணைப்பதிவாளா் தகவல்
கூட்டுறவு சங்க பாடலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா்
க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025 ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தமிழில் கூட்டுறவு பற்றிய தனித்துவமான
பாடலாக இருக்க வேண்டும்.
கூட்டுறவாளா்கள், பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி, உத்வேகம் உண்டாக்கக்கூடியதாக பாடல் வரிகள் இருக்க வேண்டும். தோ்வுக்கு அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான பணமுடிப்பு மற்றும் கேடயம்
பரிசாக வழங்கப்படும். அனுப்பப்படும் பாடலின் ’’ஏஹழ்க் இா்ல்ஹ்’’-ஐ கூரியா் அல்லது தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன் றியம், என்.வி.நடராசன் மாளிகை, நெ.170.பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கும்.
அனுப்பப்படும் பாடலின் ’நா்ச்ற் ஸ்ரீா்ல்ஹ்’ஐ தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே-30 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.