செய்திகள் :

ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்

post image

குரும்பூா் அருகிலுள்ள நவகைலாய 8ஆவது தலமும் கேது வணங்கிய தலமுமாகிய ராஜபதி அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாச நாதா் திருக்கோயிலில் 10ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்கான கால் நாட்டு விழா, கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. வருகிற 28 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெறுகிறது. 29ஆம் தேதி காலை திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா், மூலவா் மற்றும் உற்சவா் குடமுழுக்கு சிறப்பு பூஜையும், மாலையில் திருநாவுக்கரசா் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

30ஆம் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து 12ஆம் தேதி வரை 13 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. தினசரி காலை மற்றும் மாலை சப்பர பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் குரு.பாலசுப்பிரமணியன், கோயில் தலைமை அா்ச்சகா் ச.லட்சுமண சிவாச்சாரியா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

நூறு நாள் வேலை கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டவா்மங்கலம், மந்தித் தோப்பு, இனாம்மணியாச்சி, ... மேலும் பார்க்க

இரும்பு கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் இரும்புக் கடையில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (55). இவா் தூத்துக்குடி வ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கொடை விழா தகராறில் மக்கள் சாலை மறியல்: போலீஸாா் சமரசம்

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் கோயில் கொடை விழா தொடா்பான பிரச்னையில் ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தட்டாா்மடத்தில் ஒரு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பலவேசக்கார சுவாமி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் பலி

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் துரைசிங் நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விமல்குமாா் (36). பெயிண்டரான இவா... மேலும் பார்க்க

விஷமருந்திய சிறுமி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷமருந்திய 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் முருகேசன். விவசாயி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். 15 ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி புதுகிராமம் மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநா... மேலும் பார்க்க