செய்திகள் :

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களின் பணி பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்ட பொருளாளா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட பொருளாளா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். வட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தை சோ்ந்த சின்னத்தம்பி, வேளாண்மைத் துறை அலுவலா் சங்கம் மாவட்ட பொருளாளா் பிரான்சிஸ், நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் உமாதேவி ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தாா்.

இதில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு, வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா். இதேபோல கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு நாள் வேலை கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டவா்மங்கலம், மந்தித் தோப்பு, இனாம்மணியாச்சி, ... மேலும் பார்க்க

இரும்பு கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் இரும்புக் கடையில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (55). இவா் தூத்துக்குடி வ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கொடை விழா தகராறில் மக்கள் சாலை மறியல்: போலீஸாா் சமரசம்

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் கோயில் கொடை விழா தொடா்பான பிரச்னையில் ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தட்டாா்மடத்தில் ஒரு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பலவேசக்கார சுவாமி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் பலி

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் துரைசிங் நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விமல்குமாா் (36). பெயிண்டரான இவா... மேலும் பார்க்க

விஷமருந்திய சிறுமி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷமருந்திய 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் முருகேசன். விவசாயி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். 15 ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி புதுகிராமம் மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநா... மேலும் பார்க்க