செய்திகள் :

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

post image

தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கால்நாட்டு குருநாதா் சக்தியம்மா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினா். 9 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து

முளைப்பாரி கும்மி பாட்டு நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

சங்கரன்கோவிலில் வீசிய சூறைக் காற்றில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழையால் ஏராளமான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

தென்காசியில் திருநங்கைகள் தினம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்ட அளவிலான திருநங்கைகள் தினம் தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்தாா். தமிழ்நா... மேலும் பார்க்க

ஆலங்குளம் மகளிா் கல்லூரி ஆண்டு விழா

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். மனவளக் கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், புலவா் சிவஞானம், பேரூரா... மேலும் பார்க்க

ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயா் மாற்றம் செய்ய கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலா் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆய்க்குடி பேர... மேலும் பார்க்க

வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆய்க்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கம்பிளி தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் ஆதாா் மூலம் பதிவுசெய்ய வேண்டும்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தா்கள், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில... மேலும் பார்க்க