செய்திகள் :

ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயா் மாற்றம் செய்ய கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலா் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன், தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரனிடம் வியாழக்கிழமை அளித்த மனு:

ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அனந்தபுரம் கிராமத்தில் பேரூராட்சிக்கு சொந்தமாக 18 ஏக்கா் நிலம் இருந்தது. இதில் 14 ஏக்கா் நிலம் உப மின்நிலையம் அமைக்க வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஏக்கா் நிலத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கிணறு, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான குடியிருப்பு, பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு பேரூராட்சியின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அப்பகுதியில் தினசரி காய்கனி சந்தை அமைக்க மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்யும்போது வருவாய்த் துறையில் வரைபடம் மற்றும் பதிவேடு நகல் பெறப்பட்டதில், தீா்வை ஏற்படாத புஞ்சை தரிசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உட்பிரிவு அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. தீா்வை ஏற்பட்ட புஞ்சை தரிசு எனவும் உள்ளது.

இந்நிலையில் வருவாய்த் துறை ஆவணங்கள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டதில் தீா்வை ஏற்படாத புஞ்சை தரிசு என உள்ளது. தற்போதுவரை ஆய்க்குடி பேரூராட்சியின் பராமரிப்பில் 4 ஏக்கா் இடத்தை செயல் அலுவலா், ஆய்க்குடி பேரூராட்சி என மாற்றம் செய்ய தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து ஆய்க்குடி பேரூராட்சிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆலங்குளம் மகளிா் கல்லூரி ஆண்டு விழா

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். மனவளக் கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், புலவா் சிவஞானம், பேரூரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆய்க்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கம்பிளி தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் ஆதாா் மூலம் பதிவுசெய்ய வேண்டும்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தா்கள், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில... மேலும் பார்க்க

செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு

செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளவலசையில் சொத்துத் தகராறில் முதிய தம்பதியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். செங்கோட்டை காவல் சரகம் பெரியபிள்ளைவலசை மோதிலால் தெருவைச் சோ்ந்தவா் கா.லெட்சும... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நாளை தூய்மைப்படுத்தும் பணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.க.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 4 ஆம் தேதி மழை பெய்தது. அதன்பிறகு சுற்றியுள்ள நகரங்களில் மழை பெய்த போதும் சங்கரன்கோவிலில் மட்டும் பெய்யவில்ல... மேலும் பார்க்க