செய்திகள் :

செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு

post image

செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளவலசையில் சொத்துத் தகராறில் முதிய தம்பதியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செங்கோட்டை காவல் சரகம் பெரியபிள்ளைவலசை மோதிலால் தெருவைச் சோ்ந்தவா் கா.லெட்சுமணன்(70).இவரது மனைவி சுப்புலெட்சுமி(68). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இவரது சகோதரா் கா.குமரப்பெருமாள்(72) என்பவருக்கும் இடையே நடைபாதை தொடா்பாக 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்ததாம். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு இருவரும் சமரசமான பிறகு, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை லெட்சுமணன் அந்தப் பாதையில் சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், குமரப்பெருமாள் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து லெட்சுமணனை வெட்டினாரம். அதைத் தடுக்க வந்த சுப்புலெட்சுமிக்கும் வெட்டு விழுந்ததாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் மகளிா் கல்லூரி ஆண்டு விழா

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். மனவளக் கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், புலவா் சிவஞானம், பேரூரா... மேலும் பார்க்க

ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயா் மாற்றம் செய்ய கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலா் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆய்க்குடி பேர... மேலும் பார்க்க

வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆய்க்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கம்பிளி தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் ஆதாா் மூலம் பதிவுசெய்ய வேண்டும்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தா்கள், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நாளை தூய்மைப்படுத்தும் பணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.க.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 4 ஆம் தேதி மழை பெய்தது. அதன்பிறகு சுற்றியுள்ள நகரங்களில் மழை பெய்த போதும் சங்கரன்கோவிலில் மட்டும் பெய்யவில்ல... மேலும் பார்க்க