செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

post image

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படம் வரையப்பட்டு வெளியிடப்பட்டது. மூவரும் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.

அந்த வரைபடத்தில் இருந்தவர்கள், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசைன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் என்பது அடையாளம் காணப்பட்டது. மேலும் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாராவில் உள்ள அடில் ஹுசைன் தோகர் மற்றும் புல்வாமா மாவட்டம் டிராலில் உள்ள ஆஷிப் ஷேக்கின் வீடுகளில் நேற்றிரவு இந்திய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் இருவரின் வீட்டையும் இந்திய ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பந்திபோராவில் நடைபெற்ற தேடுதல் பணியின்போது லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லியை ராணுவ வீரர்கள் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.

மேலும், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த துணைவேந்தர்கள்!

21ஆவது மாடியிலிருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்து பலி!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் ... மேலும் பார்க்க

'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்.இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (83) வயது மூப்பு காரணமாக காலமானார்.இவர், 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். ம... மேலும் பார்க்க

சாவர்க்கர் வழக்கில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையான கருத்து... மேலும் பார்க்க

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதர... மேலும் பார்க்க