செய்திகள் :

`புகழ் உச்சம் பெற்று திடீரென காணாமல் போவார்கள், அதனால்..' - சூர்யவன்ஷி குறித்து சேவாக்

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார்.

லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரும் வைபவ்வை உச்சி முகர்ந்து பாராட்டினர். ஆனால், அதே வைபவ் நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, 'கிரிக்கெட்டை பொறுத்தவரை சிறப்பாக விளையாடும் போது பாராட்டுகள் குவியும். அதேபோல மோசமாக விளையாடும்போது விமர்சனங்கள் வரும்.

ஐபிஎல் தொடரில் 1 அல்லது 2 போட்டிகளில் விளையாடி உச்சக்கட்ட புகழை அடைந்து, திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதன்பின் அவர்களை மீண்டும் பார்க்கவே முடியாது. அதற்கு காரணம் அந்த வீரர்கள் தங்களின் மனதில் ஸ்டார் என்று நினைத்துக் கொள்வதுதான்.

வைபவ் சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரைக் குறைந்தது 20 ஆண்டுகளாவது விளையாட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும். விராட் கோலி 19 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார். இதுவரை 18 சீசன்களில் விளையாடி இருக்கிறார். விராட் கோலியை போல் நீண்ட ஆண்டுகள் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்.

சேவாக்
சேவாக்

ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதே மகிழ்ச்சி என்று நினைத்துகொண்டு, கோடிகளில் சம்பாதிப்பதே போதும் என்று நினைத்தால், அவ்வளவுதான் ஒன்றும் செய்ய முடியாது. ” என்று வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை வழங்கும் தொனியில் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Fleming: இளம் வீரர்களுக்கு எதிராக தவறான தகவல்; தவறான அணுகுமுறை.. முரண்பாடாக பேசும் ப்ளெம்மிங்!

'இளம் வீரர்களுக்கு எதிராக ப்ளெம்மிங்!'சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் மைக்கை பிடித்தாலே இளம் வீரர்களை விமர்சிக்கும் தொனியில் மட்டுமே பேசுகிறார். இளம் வீரர்கள் சார்ந்த அவருடைய பார்வையை வ... மேலும் பார்க்க

Arjun Tendulkar: ``இதைச் செய்தால் அடுத்த கெயில் அர்ஜுன் டெண்டுல்கர்தான்'' - யுவராஜ் தந்தை சவால்

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனாக இருந்தாலும், கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக தனக்கென தனி இடம்பிடிக்கப் போராடிவருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். ஐ.பி.எல்லில் 2023... மேலும் பார்க்க

Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்கர் கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டும் நேபாள நாட்டைச் சே... மேலும் பார்க்க

CSK vs SRH: `ஒன்றிரண்டு பேரை தவிர யார் ரன் அடித்திருக்கிறார்கள்?' - இளம் வீரர்கள் பற்றி ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

CSK vs SRH: `எங்களோட இன்ஸ்பிரேஷன் RCB தான்!' - ப்ளே ஆப்ஸ் வாய்ப்புப் பற்றி ஸ்டீபன் ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

Pahalgam Attack: `எங்கள் அரசு செய்வதை நாங்கள் செய்வோம்’ - BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் ... மேலும் பார்க்க