செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்திலுள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.

இதையும் படிக்க: ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர்!

ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

இன்னும் இரண்டு மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்காட் போலாண்டைக் காட்டிலும் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணியில் பிரதான பந்துவீச்சாளர்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளருக்கான ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் ஆல்ரண்டர் பியூ வெப்ஸ்டர் இடம்பெறும் பட்சத்தில், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக ஜோஸ் ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலாண்ட் இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இதையும் படிக்க: 400-ஆவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனி!

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் ரவி சாஸ்திரி பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலாண்ட் இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் யாரைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடிமனதாக இருக்கும். ஆனால், ஜோஸ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார். இங்கிலாந்து ஆடுகளங்களின் சூழல் ஜோஸ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்காக லார்ட்ஸ் திடலில் கிளன் மெக்ராத் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல, ஜோஸ் ஹேசில்வுட்டும் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு - காஷ்ம... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி: 2-வது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர்!

ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிஎஸ்எல் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ... மேலும் பார்க்க

பிஎஸ்எல்: ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பணியாற்றும் ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய... மேலும் பார்க்க

10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ஷிவம் துபே..!

சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.ஆல்ரவுண்டரான ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். டிஎன்எஸ்ஜேஏ (தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜா... மேலும் பார்க்க