செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்

post image

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள், நடிகர் - நடிகைகள், விளையாட்டுப் பிரபலங்கள் என பலரும் தங்கள் எதிர்ப்புகளையும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, நடிகை காஜல் அகர்வாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஹிந்து மற்றும் முஸ்லீம் இடையேயான பிரச்னை கிடையாது. ஆனால், சில வெறுப்பாளர்கள் அதைத்தான் விரும்புகின்றனர்.

இது பயங்கரவாதம் மற்றும் மனிதநேயத்துக்கு இடையேயான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை என்பது அதிக பயத்தையும், இருதரப்பினருக்கு எதிரான பிரிவு உணர்வை மட்டுமே உருவாக்கும். நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். முன்பு இருந்ததைவிட இப்போது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஹிந்து - முஸ்லீம் இடையேயான பிரச்சினை குறித்து தைரியமாக பேசியுள்ளதாக நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்!

அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பிய 191 பாகிஸ்தானியர்கள்

பஞ்சாபின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை 191 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

சிக்கிமின் லாச்செங் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட... மேலும் பார்க்க

குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

குவாலியர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் ப... மேலும் பார்க்க

பாட்னா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம ... மேலும் பார்க்க

தில்லி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு!

தில்லி மேயராக பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தில்லியில் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்ததால் பாஜக, காங்கிரஸ் ... மேலும் பார்க்க