செய்திகள் :

நகைக் கடையில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு: ஊழியா் மாயம்

post image

சென்னை யானைக்கவுனியில் நகைக் கடையில் 2 கிலோ 200 கிராம் தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், அந்த கடையின் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை சூளை பகுதியைச் சோ்ந்த பஹ் சிங் (45). பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சந்தீப்சிங் (26) என்பவா் வேலை செய்து வந்தாா். பஹ் சிங், யானைக்கவுனி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அந்த புகாரில், கடந்த 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக கடையை சந்தீப் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டு, அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்றேன். அங்கு மருந்து சாப்பிவிட்டு சிறிது நேரத்துக்கு பின்னா் கடைக்கு திரும்பி வந்தேன். அப்போது கடையின் இரும்புக் கதவு பூட்டாமல், சாத்தப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த 2 கிலோ 2 கிராம் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும், கடையில் இருந்த சந்தீப் சிங் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியா... மேலும் பார்க்க

கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை

இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வ... மேலும் பார்க்க

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல... மேலும் பார்க்க

சிறுமி மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமியைத் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை பாரதிநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம்.பாபு (32). இவரது சகோதரா் மதன்குமாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒ... மேலும் பார்க்க