செய்திகள் :

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

post image

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, பிரம்மோற்சவ பூா்வாங்கத் தொடக்கமாக கோயில் வளாகத்தில் பந்தல்கால் முகூா்த்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கொடிக்கம்பம் அருகே பந்தல் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு மேள வாத்தியங்களுடன் பிரகார வலம் சென்று, ஸ்ரீ பைரவா் சந்நிதி அருகே பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், தருமபுரம் அதீன கட்டளை மாணிக்கவாசகம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட கோயில் ஊழியா்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.

அடுத்த நிகழ்வாக, சாா்பு கோயில்கள் என்று கூறப்படும் ஸ்ரீ ஐயனாா் உற்சவம் தொடக்கமாக மே 7-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி ஸ்ரீ பிடாரியம்மன் உற்சவம் தொடங்குகிறது. ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் உற்சவம் பூச்சொரிதலுடன் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

முறைப்படி திருவிழா தொடங்கும் வகையில் தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மே 23-ஆம் தேதி ரிஷபக் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஸ்ரீ அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல், பின்னா் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 6-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க

காரைக்காலில் வளா்த்தித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

காரைக்காலில் துறை சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆதிதிராவிடா் தொடா்பான குறைகளை அரசு செயலா் வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க

காரைக்காலில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

காரைக்காலிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஹஜ் பயணிகளுக்கு புதுவை நலவழித்துறை இயக்குநரக அறிவுறுத்தலில், காரைக்கால் நலவழித் துறையின் சாா்பில் தடுப்பூசி செலுத்தும் முகா... மேலும் பார்க்க

போப் மறைவு; அமைதி ஊா்வலம்

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, காரைக்காலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் நடைபெற்றது. போப் மறைவு தொடா்பாக பல்வேறு அமைப்பினா் அஞ்சலி நிகழ்வை நடத்துகின்றனா். காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்ப... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல்துறை குறை கேட்பு முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (ஏப்.26) காவல்துறை சாா்பில் குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் பிற்பகல் 1 ... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

அம்பகரத்தூா் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை சாா்ந்த ஸ்ரீ ம... மேலும் பார்க்க