செய்திகள் :

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

post image

மும்பையில் உள்ள இந்திய அணுசக்திக் கழக (என்பிசிஐஎல்) தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 400 அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NPCIL/HQ/HRMET/2025/02

பணி: Executive Trainee (GATE - 2025)

காலியிடங்கள்: 400

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.74,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30.4.2025 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தேர்வு செய்யப்படும் முறை: 2023, 2024, 2025 ஆண்டுகளில நடைபெற்ற கேட் தேர்வுகள் ஏதாவதொன்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும் தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பொது,ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கட்டணம் செலுத்தவும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.npcil careers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்க கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஆண்ட்ரூ யூல் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது 1863 முதல் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள், பொறியியல் மற்றும் மின் பிரிவுகள் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 01/2025 - Admin (R)ப... மேலும் பார்க்க

ரூ.42 சம்பளத்தில் திருச்சி என்ஐடியில் வேலை!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 12 தேதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. அறி... மேலும் பார்க்க

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட... மேலும் பார்க்க

ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லை... மேலும் பார்க்க

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். CDOT/HR/REC/2025/02... மேலும் பார்க்க