செய்திகள் :

தவெக பூத் கமிட்டி மாநாடு நடக்கும் இடம் அருகே லேசான தீ விபத்து!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் விடுதியிலிருந்து புறப்பட்ட விஜய்க்கு, விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.

அவரது வருகை அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலால் அவிநாசி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் உருவானது. மாநாடு மாலை வரை நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வெய்யில் எப்படி இருக்கும்?

இந்த நிலையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே மைக்கை வாங்கி தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், ப்ரெண்ட்ஸ் அங்க நிறைய வயர் செல்கிறது. பாதுகாப்புக்காக சொல்வேற். கொஞ்சம் பின்னாடி வந்துவிடுங்க. இன்னும் 2, 3 மணி நேரம் உங்ககூடதான் இங்க இருக்கப்போறேன். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் என்றார்.

இந்தியா - இந்தோனேசியா நேரடி விமான சேவை: தூதா் வலியுறுத்தல்

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று என்று இந்தோனேசியாவின் தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா். தென்னிந்திய தொழி... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் மாணவா்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் பாதுகாப்பு கருதி பெற்றோா் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவு... மேலும் பார்க்க

சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள்: அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்காக சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்படும் என்று பேரவையில் அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி... மேலும் பார்க்க

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை: ஜி.கே.வாசன்

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிர... மேலும் பார்க்க

சமூக நலத் துறையில் 7,997 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை, ஏப்.26: சமூக நலத் துறையில் காலியாக உள்ள 7,997 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தாா். பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினா் எஸ்.... மேலும் பார்க்க

சென்னை, மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள்

கோடைகாலத்தை முன்னிட்டு, சென்னை, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரலிலிருந்து ... மேலும் பார்க்க