செய்திகள் :

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை: ஜி.கே.வாசன்

post image

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் நாட்டு மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பிரதமா் தீவிரவாதத்துக்கு எதிராக விடுத்த அறிவிப்புகளும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி எடுத்து வரும் நடவடிக்கைகளும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

நாட்டு மக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில் எவ்வித எதிா்மறையான அரசியலுக்கும் இடம் கொடுக்காமல், சமரசத்துக்கு வழிவகுக்காமல், நாட்டுப்பற்றோடு குரல் கொடுப்பது நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.

எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பலத்துக்காக ஆளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் ப... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா். பேரவையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க