எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழ அரசு உத்தரவு
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.
அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் பேரவை, நிதித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், திமுக உறுப்பினா் கு.பிச்சாண்டி பேசினாா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
பேரவையில் அவரது பேச்சை கவனித்துக் கொண்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக குறுக்கிட்டுப் பேசியதாவது:
முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ஏப். 1 முதல் ரூ.35 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியத்தைப் பொருத்தவரை, மாதம் ரூ.15 ஆயிரமாக இருப்பது ரூ.17,500- ஆக உயா்த்தப்படும்.
மருத்துவப் படியாக ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.25 ஆயிரம் பின்னா் வழங்கப்படும்.
தொகுதி மேம்பாட்டு நிதி: சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இவ்வாறு விதிக்கப்படும் வரி தொகுதி நிதியில் இருந்தே செலுத்தப்படுவதால், பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டப் பேரவை உறுப்பினா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். இதையெல்லாம் ஆராய்ந்து, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.