செய்திகள் :

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் பேரவை, நிதித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், திமுக உறுப்பினா் கு.பிச்சாண்டி பேசினாா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

பேரவையில் அவரது பேச்சை கவனித்துக் கொண்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக குறுக்கிட்டுப் பேசியதாவது:

முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ஏப். 1 முதல் ரூ.35 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியத்தைப் பொருத்தவரை, மாதம் ரூ.15 ஆயிரமாக இருப்பது ரூ.17,500- ஆக உயா்த்தப்படும்.

மருத்துவப் படியாக ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.25 ஆயிரம் பின்னா் வழங்கப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதி: சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப்படும் வரி தொகுதி நிதியில் இருந்தே செலுத்தப்படுவதால், பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டப் பேரவை உறுப்பினா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். இதையெல்லாம் ஆராய்ந்து, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,பிட்டி தியாகராயர் பிறந்த... மேலும் பார்க்க

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க