செய்திகள் :

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம்

post image

சென்னை: பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த தேர்தலுக்கு முன்னாள் 400 இடங்களை பெறப்போவதாக பாஜக சபதம் எடுத்தது. அந்த சபதம் மட்டும் நிறைவேறி இருந்தால் மக்களவையில் 400 இடங்களை பாஜக வென்றிருந்தால் மக்கள் அளித்திருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்திருப்பார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர்களை வைத்து வீடுகளை எல்லாம் இடிக்கிறார்களே அதேபோல ஒரே வாரத்தில் அரசியல் சாசனத்தை தகர்த்து தூக்கி எறிந்து இதற்கு இரண்டாவது குடியரசு இதற்கு புதிய அரசியல் சாசனம் என்று பாஜக அரசு நிச்சயம் செய்திருக்கும். அதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை.

ஆனால், இந்திய மக்கள் 400 இடங்களை கொடுக்கவில்லை. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கூட கொடுக்கவில்லை. மக்களவையில் அருதிபெரும்பான்மையை கூட கொடுக்கவில்லை. 270-க்கு குறைவாக 240 இடங்களோடு நிறுத்திவிட்டார்கள். 240 இடங்களோடு நிறுத்திவிட்டதால் அரசியல் சாசனத்தை காப்பாற்றியதாக மக்கள் நினைக்கலாம்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின்: கி. வீரமணி

ஆனால் மோடி தலைமையில் உள்ள அரசு ஆர்எஸ்எஸ் இயத்திலே இருக்கக்கூடிய பாஜக அவர்கள் வேறு திட்டத்தை வரையறுக்கிறார்கள்.

புல்டோசரை கொண்டுதானே அரசியல் சாசனத்தை தகர்க்க முடியவில்லை. உளி, சுத்தியலை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கலாம் என்றுதான் கடந்த ஒரு ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு சட்டம், கல்வி உரிமையை சிதைப்பது என பல சட்டங்களை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புல்டோசரை வைத்து சிதைத்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக நின்று நிதானித்து திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வைத்து சிதைத்து வருகிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குடியேற்றச் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள், அதுவும் அரசியலமைப்பையும், தனிநபர் உரிமையையும் சிதைப்பது தான். அரசியல் சாசனத்தை சிதைத்து வருகிறார்கள் என சிதம்பரம் கூறினார்.

நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டிற்கே முன்னோடியாக திராவிட மாடல் திட்டங்கள் திகழுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ம... மேலும் பார்க்க

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா்: பஹல்காம் தாக்குதலுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப... மேலும் பார்க்க

41 தலிபான்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம்

பெஷாவா்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) குழுவைச் சேர்ந்த 41 ... மேலும் பார்க்க

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (92) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சென்னை கோபாலபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது: துணை முதல்வர் உதயநிதி

கோவையில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த தமிழக துணை முதல்வர் உதயநிதி, மகளிருக்கான திட்டங்களால் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது என... மேலும் பார்க்க