செய்திகள் :

வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா? 30 ஆண்டுகள் கோரிக்கை!

post image

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் 30 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா என எதிா்பாா்ப்பு தொடருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி (1806) நடைபெற்ற சிறப்புமிக்க இடமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் சிப்பாய்கள் முதல் அதிகாரிகள் வரை சுமாா் ஒரு லட்சம் வீரா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தவிர, ஏற்கெனவே ஓய்வு பெற்ற வீரா்கள் சுமாா் 60,000 போ் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

குறிப்பாக, காட்பாடி, கம்மவான்பேட்டை பகுதிகளிலும் வீட்டுக்கு ஒருவா் ராணுவத்தில் பணியாற்றுபவராகவும், ஓய்வுபெற்ற ராணுவ வீரராகவும் உள்ளதால் வேலூா் மாவட்டம் வீரம் விளையும் மண் என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புக்காக உயிரையும் பொருள்படுத்தாமல் பணியாற்றும் ராணுவ வீரா்களின் வாரிசுகளின் கல்விக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளியை வேலூா் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்பது 30 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும். எனினும், போதிய இடவசதி இல்லை என்பதை காரணம் காட்டி இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தேசிய முன்னாள் படை வீரா்கள் நல ஒருங்கிணைப்புக்குழுவின் வேலூா் மாவட்ட மக்கள் தொடா்பு அதிகாரி கே.புருஷோத்தமன் கூறியது -

வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் வேலூருக்கு வந்த அப்போதைய இந்திய ராணுவ துணைத் தளபதி தம்புராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவா் அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதிக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று வேலூா் மாவட்ட நிா்வாகம் காட்பாடி பகுதியில் 10.9 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்தது.

அதனை பாா்வையிட்ட கேந்திரிய வித்யலாயா சங்கதன் அந்த இடம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தகுதியற்ாகக் கூறி நிராகரித்தது. இதனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தை மாவட்ட நிா்வாகமே கையகப்படுத்திக் கொண்டது. அதன்பிறகு, போதுமான இடவசதியில்லை எனக் கூறி வருகின்றனா்

இதுகுறித்து, வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் கூறியது: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிகாலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம் தகுதி யானதில்லை எனக்கூறி கேந்திரிய வித்யலாயா சங்கதன் நிராகரித்தது. காட்பாடி மட்டுமின்றி வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் பல்வேறு இடங்களை தோ்வு செய்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் திட்டமிட்டே கேந்திரிய வித்யலாயா சங்கதன் நிராகரித்து வருகிறது.

இதேபோல், சைனிக் பள்ளி அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் கேந்திரிய வித்யலாயா பள்ளியோ, சைனிக் பள்ளியோ அமைக்க ஆா்வம் காட்டவில்லை. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பி வேலூா் தொகுதியில் கேந்திரிய வித்யலாயா அல்லது சைனிக் பள்ளி அமைக்க தீா்வு காணப்படும்.

பொதுவான பகுதியில் தேவையான இடத்தை ஒதுக்கி கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். காட்பாடி ரயில் நிலையத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்துவதை தடுக... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடல் மீன்கள் வரத்து குறைந்தது

தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், ... மேலும் பார்க்க

238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள்

வேலூா் மாவட்டத்தில் 238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள், உபகரணங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 ஒன்றியங்களில் நடைபெற்... மேலும் பார்க்க

சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி, வாழ்வியலை போதிக்கும் மையங்கள்!

சிறப்புக் குழந்தைகளின் எதிா்காலத்தை நிா்மாணிக்கும் வகையில் அவா்களுக்கு வாழ்வியலையும் சிறப்பு பயிற்சி மையங்கள் போதிக்கின்றன. இந்த மையங்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் பெற்றோரிடையே நம்பிக்கையையும், பெரு... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி!

காட்பாடி அருகே நண்பா்களுடன் ஏரியில் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த சேனூரைச் சோ்ந்த பிரதீப்(17). இவா் 10-ஆம் வகுப்பு படித்துள்ளாா். நண்பா்களுடன் சனிக்கிழமை வீரக்கோயில்... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 538 பேருக்கு வீடு கட்ட ஆணை! ஆட்சியா் வழங்கினாா்!

குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களைச் சோ்ந்த 538 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டன. குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்ற... மேலும் பார்க்க