செய்திகள் :

``இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரை திறந்துவிட்டுள்ளது.." -பாகிஸ்தான் குற்றச்சாட்டு

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதற்கிடையே சிந்து நதி நீரை தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஜீலம் ஆற்றில் இந்தியா திடீரென தண்ணீரை வெளியேற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.

ஜீலம் நதியில் திடீரென அதிகரித்த நீரோட்டம் காரணமாக முஷாபர்பாத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் அருகே உள்ள ஹத்தியன் பாலா பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆற்றங்கரை ஓரம் செல்ல வேண்டாம் என உள்ளூர் பொது மக்களுக்கு மசூதி மூலமாக எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பதற்றம் அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜீலம் ஆறு
ஜீலம் ஆறு

ஏற்கெனவே சிந்து நதி பிரச்னையில் இரு நாடுகளுக்கும் இடையே சச்சரவு நீடிக்கும் சூழலில், ஜீலம் நதியை முன்வைத்து பாகிஸ்தான் அடுத்த கட்ட அரசியல் நகர்வை முன்னெடுப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் அதிகாரிகள், இந்தியா சர்வதேச விதிகள் மற்றும் நீர் ஒப்பந்தங்களை முழுமையாக மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | Amitshah, Modi | DMK

'டாக்டர் ராமசுப்பிரமணியன்' மிக முக்கியமான அரசியல் விமர்சகர். அ.தி.மு.க ஏன் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது, எந்த இடத்தில் எடப்பாடி சிக்கிக்கொண்டார், எதை வைத்து அமித்ஷா கூட்டணி எனும் வலைக்கு கொ... மேலும் பார்க்க

``எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கு.." - இந்தியாவை நேரடியாக மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்தியா மத்திய அமைச்சர்கள் பாகிஸ்தானை மிரட்டுவதும், பாகிஸ்தான் இந்தியாவை மிரட்டுவதும் த... மேலும் பார்க்க

``என் அப்பா 10 மாதங்கள் என்னிடம் பேசவில்லை; ஆனால் அந்த நாளில்..'' -விகடன் மேடையில் நெகிழ்ந்த தமிழிசை

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந... மேலும் பார்க்க

``உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது நாகரீகமற்றது'' - வழக்கறிஞர் வில்சன்

"ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும், ஆளுநருக்கான அதிகாரங்களை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்.." என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பைப் பெறக் காரணமான திமுக மாநிலங்களவை உறுப்பினரும் ... மேலும் பார்க்க