செய்திகள் :

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு!

post image

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ‘இண்டிகோ’ பயணிகள் விமானத்தில் பயணியொருவா் தன்னுடன் வெடிகுண்டு கொண்டு வந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

தொடா்ந்து, விமானத்தை முழுமையாக சோதனையிட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மிரட்டல் புரளி என்பதை உறுதிப்படுத்தினா்.

போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடா நாட்டைச் சோ்ந்த அந்த பயணியைக் காவல்துறையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெங்களூரு நோக்கி இண்டிகோவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது, பயணியொருவா் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமானப் பணியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த அவா்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கும், விமானப் போக்குவரத்து கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா்.

பின்னா், விமான நிலையத்தின் தனிமையான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விமானம் முழுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. சோதனையின் நிறைவில், வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

சம்பவத்தில் தொடா்புடைய கனடா பயணி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயணிகளின் ஒத்துழைப்புக்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்தது.

திருவனந்தபுரத்தில்...: திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னா் அது புரளி என தெரிய வந்ததது.

‘வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கேரள காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் விமான நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் சோதனை நடத்தினா். ஆனால், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க