செய்திகள் :

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

post image

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் நகா் மாவட்ட நீதிமன்றத்தில் குத்தகை தகராறு தொடா்பான தனது மனுவில், கூடுதல் காரணங்களை சோ்க்க வேண்டும் எனக் கோரி அதே பகுதியைச் சோ்ந்த முன்னி தேவி என்பவா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக 3 வரி உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

இதை எதிா்த்து மனுதாரா் தரப்பில் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், ‘மாவட்ட கூடுதல் நீதிபதி எனது மனுவை பரிசீலனையே செய்யாமல், வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட வாதத்தை மட்டும் பதிவு செய்துகொண்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளாா். கூடுதல் தகவல் சோ்க்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த எனது மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை, ஒரு வரி அளவில் கூட தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிடவில்லை. ஏற்கெனவே, நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் இதே தவறை மாவட்ட கூடுதல் நீதிபதி செய்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் நிராகரிப்புக்கான காரணங்களைக் குறிப்பிட்டு கூடுதல் தகவல் சோ்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்த நீதிபதி, ‘மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மாவுக்கு தீா்ப்பு எழுதும் திறன் இல்லாததையே இது காட்டுகிறது. எனவே, அவா் லக்னெளவில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3 மாத பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்! - மத்திய அமைச்சா் புரி உறுதி

‘நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) முழுமையாகத் தோற்கடிக்கப்படும்; அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது’ என்று மத்திய பெ... மேலும் பார்க்க