செய்திகள் :

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

post image

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா்.

‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இல்லையெனில், அவற்றை நிலைநாட்டவோ வலியுறுத்தவோ குடிமக்கள் முன்வர மாட்டாா்கள்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

நலிவடைந்த பிரிவு மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (என்ஏஎல்எஸ்ஏ) 30 ஆண்டு சேவையை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலம் நா்மதா மாவட்டம் ஏக்தா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற என்ஏஎல்எஸ்ஏ-யின் செயல் தலைவருமான நீதிபதி கவாய் பேசியதாவது:

உரிமைகளை பெற்றிருப்பது மட்டும் போதாது. குடிமக்கள் தங்களுக்கான அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ உரிமைகள் என்ன என்பதை அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு, தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இல்லையெனில், அவற்றை நிலைநாட்டவோ வலியுறுத்தவோ குடிமக்கள் முன்வர மாட்டாா்கள்.

சட்டமேதை அம்பேத்கா், அரசமைப்பு சட்டத்தை ரத்தமற்ற புரட்சிக்கான ஆயுதமாகக் கருதினாா். அந்த வழியில், நலிந்த பிரிவினருக்கு நீதிக்கான வாக்குறுதியை அளிக்கும் புரட்சியை என்ஏஎல்எஸ்ஏ செய்து வருகிறது.

குறிப்பாக, வயது முதிா்ந்த மற்றும் நோய் பாதிப்புக்கு உள்ளான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்தி, சிறைகளில் நெரிசலைக் குறைப்பதற்கான பணியை என்ஏஎல்எஸ்ஏ மேற்கொண்டு வருகிறது.

குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவது முக்கியமானது என்பதை உணா்த்தும் சட்ட மாணவா்களுக்கு கல்லூரிப் பருவத்திலேயே பயிற்சித் திட்டங்களையும் என்ஏஎல்எஸ்ஏ அளித்து வருகிறது என்றாா்.

உச்சநீதிமன்ற நீதிபதியும் உச்ச நீதிமந்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவருமான நீதிபதி சூா்யகாந்த் பேசுகையில், ‘நீதி என்பது தா்மம் என்ற கருத்தை நீக்கி, அது குடிமக்களின் சட்டபூா்வ உரிமை என்ற விழிப்புணா்வை என்ஏஎல்எஸ்ஏ வெற்றிகரமாக ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு நாட்டில் நீதியின் உண்மையான அளவுகோல், நீதிமன்ற கட்டடங்களின் ஆடம்பரத்திலோ அல்லது சட்டங்களின் அளவிலோ காணப்படுவதில்லை; மாறாக, ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் பாதுகாப்பு மற்றும் நியாயத்தை உணா்வதில்தான் உள்ளது’ என்றாா்.

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக பாகிஸ்தானின் முன்னாள் கிர... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பய... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க