செய்திகள் :

பைக் மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

post image

தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகே கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அரவிந்த்பாலா (28), கிருபை ராஜ் (29). இருவரும் இரு சக்கர வாகனத்தில் தாயில்பட்டி பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த வேன் இவா்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே அரவிந்த் பாலா

உயிரிழந்தாா். கிருபை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

த.வெ.க.சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு!

ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ராஜபாளையம், காந்தி கலை மன்றம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்வுக்கு விருதுநகா் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி தலைமை... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

சாத்தூா் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அதன் சுற்ற... மேலும் பார்க்க

காஷ்மீரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி!

பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சாத்தூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள், இந்து முன்னணியினா் சனிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினா். காஷ்மீா் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் க... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம், பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, சாத்தூரில் நகர வட்டார காங்கிரஸ் சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தபட்டது. காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஜோ... மேலும் பார்க்க

விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

ராஜபாளையம், ஏப். 25: ஜம்மு காஷ்மீா் மாநிலம், பஹஸ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, ராஜபாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் பொன்வ... மேலும் பார்க்க