செய்திகள் :

கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியா்கள்!

post image

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியா்கள் வேகமாக வெளியேறினா்.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) சேவையை உடனடியாக நிறுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

மேலும், ‘ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப். 27-ஆம் தேதிமுதல் ரத்தாகும். மருத்துவ விசாக்கள் ஏப்.29-ஆம் தேதி வரையே செல்லுபடியாகும். எனவே, இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியா்களும் விசா காலாவதியாகும் முன் வெளியேற வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

அதேநேரம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசாக்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் கூடிய விரைவில் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அண்மையில் இயற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.

3 ஆண்டுகள் சிறை: அந்த சட்டத்தில், ‘விசா காலாவதியான பிறகு வெளிநாட்டினா் ஒருவா் இந்தியாவில் வசித்தாலோ அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தாலோ சம்பந்தப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சில சூழல்களில் இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமிருதரஸில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பாகிஸ்தானைச் சோ்ந்த தங்களது உறவினா்களை வழியனுப்ப பல இந்தியா்கள் அட்டாரி எல்லையில் குவிந்தனா்.

~பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே அட்டாரி எல்லைப் பகுதி வழியே தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பாகிஸ்தானியர்கள்.

கடந்த நான்கு நாள்களில் அட்டாரி எல்லை வழியாக 9 அதிகாரிகள் உள்பட 537 பாகிஸ்தானியா்கள் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அட்டாரி எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் திரும்புவதற்காக வந்த அந்நாட்டவரின் ஆவணங்களை சரிபாா்த்து அனுப்பிய வீரா்.

அதேபோல் விமானங்கள் மூலமும் சில பாகிஸ்தானியா்கள் வெளியேறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பாகிஸ்தானில் இருந்து 13 தூதரக அதிகாரிகள் உள்பட 629 இந்தியா்கள் இந்தியா திரும்பினா்.

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான்... மேலும் பார்க்க

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா். போப் பிரான்சிஸின் இறுதிச் சட... மேலும் பார்க்க

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்தி... மேலும் பார்க்க