செய்திகள் :

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

post image

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சோ்ந்த சனா என்ற பெண் பாகிஸ்தானியரை திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் அந்த நாட்டில் வசித்து வருகிறாா். அண்மையில் 45 நாள் (நுழைவு இசைவு) விசா மூலம் இந்தியாவை வந்தடைந்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி சனா, அவரது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு வாகா எல்லை வழியே செல்ல முயன்றாா். ஆனால் இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்தால் அவா் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் மறுத்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

ஆனால் சனாவின் இரு குழந்தைகளும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் அவா்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனா். இருப்பினும், குழந்தைகளை தனியே அனுப்ப சனா மறுத்துவிட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் சனா கூறுகையில், ‘எனது விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவைவிட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனா். வாகா எல்லையின் மறுபுறத்தில் எனது வரவுக்காக கணவரும் அவரது உறவினா்களும் காத்திருந்தனா். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் பாகிஸ்தான் செல்ல முடியவில்லை’ என்றாா்.

இந்த விவகாரத்தை உள்ளூா் போலீஸாா் தொடா்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தியதாக மீரட் காவல் துறை கண்காணிப்பாளா் (ஊரகம்) ராகேஷ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க