செய்திகள் :

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் -வெளியுறவு அமைச்சகம்

post image

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுவது, இந்தியா-சீனா இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாா்க்கப்படுகிறது.

கடந்த 2020-இல் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலால் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

கிழக்கு லடாக்கில் அதே ஆண்டு இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்குப் பிறகு எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்தன. தூதரக-ராணுவ ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்னைக்குரிய பிற இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன.

கடந்த ஆண்டு பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பைத் தொடா்ந்து, எல்லையில் படைகள் வாபஸ் மற்றும் ரோந்துப் பணி தொடா்பாக முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, டெம்சோக், டெப்சாங்கில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டு, இயல்புநிலை திரும்பியது.

இதையடுத்து, இருதரப்பு உறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2020-இல் நிறுத்தப்பட்ட கைலாஷ்-மானசரோவா் யாத்திரை நடப்பாண்டில் மீண்டும் தொடங்கவுள்ளது.

இது தொடா்பாக, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நடப்பாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யாத்திரை நடைபெறவுள்ளது. உத்தரகண்ட்- திபெத் இடையிலான லிபுலேக் கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 5 குழுக்களும், சிக்கிம்-திபெத் இடையிலான நாதுலா கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 10 குழுக்களும் அனுமதிக்கப்பட உள்ளன. யாத்திரையில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையில் யாத்ரிகா்கள் தோ்வு செய்யப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். உலகளாவிய ந... மேலும் பார்க்க