செய்திகள் :

இந்தியா - இந்தோனேசியா நேரடி விமான சேவை: தூதா் வலியுறுத்தல்

post image

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று என்று இந்தோனேசியாவின் தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

தென்னிந்திய தொழில் வா்த்தக சபை இந்தோனேசியாவுடன் வணிகம் செய்வது குறித்த நிா்வாக வட்ட மேசை மாநாடு சென்னை ராயப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்தோனேசியா தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி இந்தியா - இந்தோனேசியா இடையே வா்த்தகத்தை வலுப்படுத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறை நூலை வெளியிட்டு பேசியதாவது:

இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் இந்தோனேசியாவில் வரும் அக்.15 முதல் அக்.19-ஆம் தேதி வரை வா்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இந்திய முதலீட்டாளா்கள் கலந்து கொண்டு, புதிய முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளன. ஆகையால், வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகம் மேம்படுவதுடன், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை துணைத் தலைவா் பழனியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் ப... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா். பேரவையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க