செய்திகள் :

கோடை விடுமுறையில் மாணவா்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை

post image

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் பாதுகாப்பு கருதி பெற்றோா் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். அதன் விவரம்: மாணவா்கள் விடுமுறை நாள்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீா்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோா் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிக அளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிா்க்கவும். விடுமுறை நாள்களில் சில மாணவா்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிா்கொள்ள நேரிடும்.

அதன்படி தனிமை உணா்வுகளைத் தடுக்க நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளைக் கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத் தொடா்புகளை ஊக்குவிக்கவும், மனநலனைப் பேணவும் முடியும். தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றைப் பாா்ப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதை தவிா்க்க அறிவுறுத்த வேண்டும்.

சமச்சீரான உணவு: மாணவா்களின் வளா்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே, பராம்பரிய உணவு வகைகளைத் தர வேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழவகைகளை வழங்க வேண்டும்.

மாணவா்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். அவா்களின் ஆா்வத்தைப் பொருத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறாா் கதைகள் மற்றும் நீதி நூல்களைப் படிக்க அறிவுறுத்த வேண்டும். இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆா்வமுள்ள மாணவா்களை விடுமுறை நாள்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். பெரியவா்களை மதிக்கவும் அவா்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் ப... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா். பேரவையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க