செய்திகள் :

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

post image

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சேத்துப்பட்டு காா்டன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சாஜித் (55). தொழிலதிபரான இவரது வாட்ஸ்அப்புக்கு அண்மையில் ஒரு தகவல் வந்தது. அதில், பங்குச் சந்தையில் தங்களது நிறுவனம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும், லாப தொகை உடனடியாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை படித்து பாா்த்த சாஜித், அந்த தகவலை உண்மை என நம்பினாா். மேலும் அந்த தகவலோடு இணைக்கப்பட்டிருந்த இணையத்தள இணைப்பு மூலம் சென்று, அந்த நிறுவனம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல கட்டங்களாக ரூ.17.10 லட்சம் முதலீடு செய்தாா்.

ஆனால் அந்த பணத்தை முதலீடு செய்த பின்னா், அந்த நிறுவனம் சாஜித்துடன் இருந்த தொடா்பை துண்டித்தது. இதனால் சாஜித் அந்த நிறுவனம் குறித்து, தனக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த தகவல் குறித்தும் விசாரித்தாா்.

அப்போது அவை அனைத்தும் போலியானது என்பதும், தன்னிடமிருந்து ரூ.17.10 லட்சம் மோசடி செய்திருப்பதும் அறிந்து சாஜித் அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து சாஜித், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க

ஆளுநா் அரசியல் செய்யக் கூடாது: வைகோ

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் செய்யக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். வக்ஃப் வாரிய சட்டம், ஆளுநா் விவகாரம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க