செய்திகள் :

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 31.86 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 150 கன அடி நீா் வந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 31.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 148 கன அடி நீா் வந்தது.

இந்த நிலையில் மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும், சமவெளி பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, திருவட்டாறு, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. விடுமுறை நாளான சனிக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கருங்கல் பகுதிகளில்... கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, வேங்கோடு, மாதாபுரம், தொலையாவட்டம், நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, இலவுவிளை, மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

கன்னியாகுமரி மாவட்ட தேவைகள்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தேவைகள் குறித்து, தமிழக முதல்வா் மு. க . ஸ்டாலினை சென்னையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து வ. விஜய்வசந்த் எம்.பி. கடிதம் வழங்கினாா். மூத்த காங்கிரஸ் தலைவா் பொன்னப்ப நாட... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திடீரென ஏற்படும் மின்வெட்டால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து கருங்கல்... மேலும் பார்க்க

தேவாலய குருசடியில் திருட்டு!

தக்கலை அருகே மைலோட்டில் உள்ள புனித ஜாா்ஜியாா் குருசடியின் வெளிப்புறத்திலுள்ள காணிக்கை பெட்டியை வெள்ளிக்கிழமை உடைத்து அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலய பொருளாளா் ஆல்பின் ஜோஸ் தக்கலை ... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை மூடல்!

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் தடுப்பணை சனிக்கிழமைமுதல் மூடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள், மலையோர கிராமங்கள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயா் சூட்ட தீா்மானம்!

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயா் சூட்ட தமிழக அரசைக் கேட்டு, குழித்துறை நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, நகா்மன்றத் த... மேலும் பார்க்க

தென்தாமரைக்குளம் பதியில் சித்திரைத் திருவிழா கலிவேட்டை!

அகிலத் திரட்டு அம்மானை அருளப்பட்டதென்தாமரைக்குளம் அய்யா வைகுண்டசாமி பதியில் சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கலிவேட்டை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க