செய்திகள் :

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

post image

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ப. பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு. முத்தையா வாழ்த்திப் பேசினாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு அரசு சுகாதார, போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவது, சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை ஜூலை 10-ஆம் தேதி கோவையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாநாட்டை நடத்தும் குழுவில் மாநில அமைப்பாளராக சோ. நடராஜன், நிதிக் காப்பாளராக கி. நாகராஜன் (புதுக்கோட்டை), இணை அமைப்பாளா்களாக என். ராமசாமி (சென்னை), கே. அருணகிரி (கோவை), பிஎம். சுப்பிரமணியன் (திருச்சி), வெங்கடாசலம் (சேலம்), எம். ஈஸ்வரமூா்த்தி (திருநெல்வேலி), எஸ். பெருமாள் (மதுரை), ஜி. ராஜேந்திரன் (விழுப்புரம்), எஸ். பாலகுரு (விருதுநகா்), வேலப்பன் ஆசாரி (நாகா்கோவில்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்துத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாதேஸ்வரன் வரவேற்றாா். நிறைவாக, சோ. நடராஜன் நன்றி கூறினாா்.

புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!

நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் ந... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னமராவதி காந்தி சிலை எதிரே காங்கிரஸ் கட்சி நி... மேலும் பார்க்க

மச்சுவாடியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட மச்சுவாடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை நகருக்கு அருகே தஞ்சாவூா் செல்லும் சாலையில் மச்சுவாடி உள... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்று கணவா் தூக்கிட்டுத் தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கீழ காயம்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவா்த்தனையில் பயணச்சீட்டுகள் விநியோகம்!

வங்கி அட்டைகள் மற்றும் க்யுஆா் கோடு மூலமான டிஜிட்டல் பரிவா்த்தனைகள் வழியே புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த 389 அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள... மேலும் பார்க்க

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்!

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க