செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

post image

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தெற்கு காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை இரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இந்தநிலையில், இதுவரை மொத்தம் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் ஹுசைன் தோகெர், ஸாகிர் அஹ்மத் கானாய், ஆமிர் அஹ்மத் தார், ஆசிஃப் ஷேக், ஷாஹித் அஹ்மத் குட்டே, ஆஹ்சன் உல் ஹக் ஆமிர், ஜெய்ஷ்-இ-முஹம்மத்தை சேர்ந்த ஆமிர் நஸீர் வானி, ஜமீல் அஹ்மத் ஷேர் கோஜ்ரி, போராளிகள் முன்னணி(தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்) இயக்கத்தைச் சேர்ந்த அத்னான் சஃபி தார் மற்றும் ஃபரூக் அஹ்மத் தெத்வா ஆகியோரின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:சொல்லப் போனால்.. பஹல்காமின் இருளும் ஒளியும்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரஜெளரி உள்ளூர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!

பஹல்காம் தாக்குதல் குறித்து அவதூறு கருத்துக் கூறிய 16 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று (ஏப். 27) கைது செய்துள்ளனர். நேற்று மாலை வரையிலும் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 16 பேர் கைதாகியுள்ள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உதவிய விடியோ! எடுத்தவர் யார்?

பஹல்காம் தாக்குதலில் புகைப்படக்காரர் எடுத்த விடியோ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, மரத்தின்மீது ஏறி மறைந்துகொண்ட புகைப்படக்காரர், முழு ... மேலும் பார்க்க

ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை... மேலும் பார்க்க

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க