செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உதவிய விடியோ! எடுத்தவர் யார்?

post image

பஹல்காம் தாக்குதலில் புகைப்படக்காரர் எடுத்த விடியோ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, மரத்தின்மீது ஏறி மறைந்துகொண்ட புகைப்படக்காரர், முழு சம்பவத்தையும் விடியோ பதிவு செய்துள்ளார். அந்த விடியோவைக் கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஊள்ளூரில் உதவியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள பைசாரன் பள்ளாத்தாக்கிலுள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

உதவிகரமாக அமைந்த விடியோ

தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழமை முதல் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுக்கள், பயங்கரவாதிகள் பைசாரன் பள்ளத்தாக்கின் புல்வெளிகளில் நுழைந்தது எப்படி? அவர்களுக்கு உள்ளூரில் உதவியவர்கள் யார்? என்பது போன்ற ஆதாரங்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு அப்பகுதியைச் சேர்ந்த புகைப்படக்காரர் எடுத்த விடியோ பெரும் உதவியாக அமைந்துள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது அப்பகுதியில் இருந்த புகைப்படக்காரர், தன் உயிரைக் காத்துக்கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள மரத்தில் ஏறி மறைவாக அமர்ந்துள்ளார்.

எனினும், அப்பகுதியில் நடந்த முழு தாக்குதலையும் தன்னுடன் இருந்த கேமராவில் விடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவைக் கொண்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அதில், இரு குழுக்களாக பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியது, அவர்கள் பதுங்கியிருந்தது, உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தாக்குதலின்போது 2 செல்போன்களை பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். அந்தச் சம்பவமும் விடியோவில் பதிவாகியுள்ளன. அந்த செல்போன்கள் குறித்த தரவுகளைத் தேடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இரு செல்போன்களும் பிறகு பயன்படுத்தப்பட்டதா? எங்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது? என்ற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஏகே - 47 மற்றும் எம் - 4 ரக துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளடக்கிய உறைகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆப்கன் போர் முடிவுக்கு வந்த பிறகு, எம் - 4 ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில், மேலும் ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா? என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த விடியோவின் அடிப்படையில் பார்க்கும்போது, பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் தொழிலாளி யாரோ ஒருவருன் உதவி கிடைத்துள்ளதாகத் தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவரே பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டி கூட்டம் அதிகமுள்ள இடங்கள் குறித்து கூறியிருக்கக் கூடும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த விசாரணையில் தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்! - மத்திய அமைச்சா் புரி உறுதி

‘நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) முழுமையாகத் தோற்கடிக்கப்படும்; அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது’ என்று மத்திய பெ... மேலும் பார்க்க