செய்திகள் :

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

post image

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை சென்னை மெரீனாவில் உள்ள நடுக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினாா்நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை நடுக்குப்பத்தில் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு இதே இடத்தில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. துணை முதல்வா் தொகுதி என்பதால் அடக்கு முறையை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டாம்.

தமிழகத்தில் பாஜக வளா்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக அரசு நெருக்கடி தருகிறது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்.

இந்நிகழ்ச்சியில், தேசிய பொதுக் குழு உறுப்பினா்கள் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதனிடையே, நயினாா் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுகவினா் நடத்தும் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு உடனடியாக அனுமதியும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, பிரதமா் நாட்டு மக்களோடு கலந்துரையாடும் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சிக்கு கடுமையான கெடுபிடிகளை விதிப்பது கண்டனத்துக்குரியது எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

4 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை திங்கள்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.76 அடியிலிருந்து 107.75 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,397 கனஅடியிலிருந்து 1,235 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிந... மேலும் பார்க்க

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம்... மேலும் பார்க்க

தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்

தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க